கோவை, ஜூன் 16: கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர் நேற்று முன்தினம் திருச்சி ரோட்டில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்று ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்து வந்து தனது டூவிலர் சீட் அடியில் வைத்து உள்ளார். பின்னர், மீண்டும் வங்கிக்குள் சென்று திரும்பியபோது டூவிலரில் வைத்திருந்த ரூ.2.50 லட்சம் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வங்கி மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post டூ விலரில் வைத்திருந்த ரூ.2.50 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.